கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முதல் இரண்டு தடுப்பூசிகளும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இதையடுத்தே, வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.