ரொரண்டோவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 676பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைய தினங்களில் பதிவான மிகக்குறைந்த தொற்றாளர் எண்ணிக்கையாக காணப்படுகின்றது.
இதேவேளை, உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நாடாளவிய ரீதியில் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 5 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு மொத்தமாக இதுவரை 12 ஆயிரத்து 867 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.