முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களை கிளிநொச்சி, இரணைதீவில் அடக்கம்

213

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இங்கு சடலங்கள் அரசாங்க செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தளவு மக்கள் வாழும் இடம் என்பதாலேயே, சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக உள்ள பகுதிகளிலேயே சடலங்களை அடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

இதற்கமைய மன்னாரிலும் அம்பாறையிலும் நிலத்தடி நீர்மட்டம் 15 மீற்றரை விட அதிகமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது இரணைதீவில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

இரணைதீவில் வசித்த தமிழ் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் மீளக் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில், தமிழ் மக்கள் பலவந்தமாக அங்கு சென்று மீளக் குடியமர்ந்துள்ளனர்.

மீளக்குடியமர்ந்த மக்களை அச்சுறுத்தி வெளியேற்றும் நோக்கிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இரணைதீவில் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *