ஒன்ராரியோவின் யோர்க் பிராந்தியமானது கொரோனா தொற்றுப் பரவலைக் கொண்ட அதிதீவிர வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வயதெல்லை 45முதல் 59ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயதெல்லைக்கு உட்பட்டவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தல் இடம்பெறவுள்ளது.
இதற்கான பதிவுகளை அவர்கள் இணைவழியில் மேற்கொள்ளமுடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.