கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்போதே, “இரு நாடுகளும் பருவநிலை மாற்றம் பற்றிய தங்களது நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் என்றும், இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் என்றும், அமெரிக்க ஜனாதிபதி, கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கும் எனவும், பல்வேறு சர்வதேச அளவிலான சவால்களுக்கு எதிராக இரு நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு, இரு நாடுகளும் பயனடையும் வகையில் கவனம் செலுத்தும் என்றும், ஜே பைடன் தெரிவித்துள்ளார்.