கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விடயங்களில் அரசியல் செய்கிறீர்கள்.
கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும், நமது விஞ்ஞானிகள் கடின உழைப்பால் உருவானவை. நீங்கள் கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்தால்,அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என்று கூறியுள்ளார்.