கொரோனா 2 ஆவது அலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
2 ஆவது அலை உருவாக நாம் தான் காரணம் என கூறியுள்ள அவர், இந்தியாவில் கொரோனா இல்லை என நினைத்து விதிமுறைகள் கடைப் பிடிக்கப்படுவதில்லை என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை தாக்கிய நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டு கொரோனா 2 ஆவது அலை இந்தியாவில் தாக்க தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தினமும் 50 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.