முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சகாயத்தின் ‘அரசியல் பேரவை’ வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டி

201

அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி சகாயம், ‛அரசியல் பேரவை’ என்ற பெயரில் வரும் சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறதால், இந்த தேர்தலில் எனது ‛அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் கட்சியுடன் எங்களது அரசியல் பேரவை இணைந்து போட்டியிடும். வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

அந்த இரண்டு கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் போட்டியிடுவார்கள் எனவும், ‛அரசியல் பேரவை’ சார்பில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து மாணிக்கம் என்பவர் போட்டியிடுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *