முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன் – மம்தா

206

தேர்தல் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டு காயமடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‛சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபின், பிரசாரம் செய்வதற்கான சென்ற போது, சிலர் அவரைத் தாக்கியிருந்தனர்.

இதில் காலில் காயமடைந்த அவர், கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்தபடி மம்தா வெளியிட்டுள்ள காணொளியில், “பிரசாரத்தை முடித்துக் கொண்டு வாகனத்துக்கு அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன்.

அதில், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையை முடித்துக் கொண்டு ஓரிரு நாள்களில் மீண்டும் பணிக்கு புறப்படுவேன்.

அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்க வேண்டும்.”என்று அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *