சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 (Chang-5) விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது.
அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம் (Oceanus procellum) என அறியப்படும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள எரிமலை தொகுதியை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின் இலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.