சட்டசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று பின்னர அறிவிப்பேன். ஆனால் நிச்சயமாகப் போட்டியிடுவேன்.
ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும்.
எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் வராத நிலையில் உள்ளனர்.
அடுத்தவர் நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை கூற மாட்டேன். நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாதி.” என்றும் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார்.