புதிய அரசியலமைப்புக்கான கூட்டமைப்பின் முன்மொழிவில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்மொழிய வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று அதன் பங்காளிக்கட்சிகளான புளொட்டும் ரெலோவும் தெரிவித்துள்ளன.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியில் கலந்துரையாடப்பட்டுவருகின்றதன் அடிப்படையில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வானது வலுவானதொரு சமஷ்டி அடிப்படையில் அமைவதனை வலியுறுத்தும் வகையில் முன்மொழிவொன்றை கூட்டமைப்பின் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமது கட்சியின் கொள்கை மற்றும் யாப்பின் பிரகாரம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டி அமைப்பினை மையப்படுத்தியதாக முன்மொழிவொன்றை கையளிப்பதே நிலைப்பாடாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.