சமஷ்டி என்ற குட்டிச் சாத்தானை கருவிலேயே அழிக்க வேண்டும் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்த சட்டமூல விவாதத்தின் போது புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தையும் இரகசியமாக உட்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் முற்படுத்த உள்ள திருத்தச் சட்டமூலமானது, இலங்கையில் சனாதிபதி முறையை இல்லாமல் செய்யும் சட்டமூலம் இல்லை எனவும், அது இலங்கையில் சமஷ்டி சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான அடித்தளம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமஷ்டி எனப்படும் இந்த குட்டிச் சாத்தானை கருவில் இருக்கும் போதே கலைப்பதற்கு கூட்டு எதிர்கட்சியினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.