முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சாஸ்காச்சுவான் வாகன விபத்தின் சாரதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

738

சாஸ்காச்சுவானில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில், 10 ஹொக்கி விளையாட்டு வீரர்கள் உட்பட 16 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விபத்துடன் தொடர்புபட்ட சரக்கு ஊர்திய்ன் சாரதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்கள் குழு சென்ற பேரூந்து மீது குறித்த இந்த சரக்கு ஊர்தி மோதியதில், 16 பேர் பலியானதுடன், 13 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேறகொண்டுவந்த காவல்துறையினர், இந்த விபத்தில் தொடர்புபட்ட சரக்கு ஊர்தியின் சாரதியான 29 வயது ஜாஸ்கிராட் சிங் சித்து(Jaskirat Singh Sidhu) என்பவர் மீது 29 குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதனை அடுத்து இன்று காலையில் கைது செய்யப்பட்ட அவர், அடுத்த வாரம் சாஸ்காச்சுவான் நீதிமன்றில் பிணை விசாரணைக்காக நிறுத்தப்படும் வரையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கரியில் உள்ள அவரது விட்டில் வைத்து, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அவர் கைது செய்யப்பட்டதாக கனேடிய மத்திய காவல்துறையின் அதிகாரி ஒருவர் றெஜீனாவில் இன்று நடாத்திய ஊடக மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் இந்த விபத்து இடம்பெற்ற நிலையில், சரியாக மூன்று மாதத்தின் பின்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இந்தக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *