முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிரியாவின் டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் பேர் கொல்லப்பட்டனர்

239

ஈராக்கின் எல்லையான சிரியாவின் டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இருபத்தெட்டு பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

பண்டைய நகரமான பல்மைராவுக்கு அருகில், பெரும்பாலும் சிரிய இராணுவமும் ஈரானிய ஆதரவுடைய போராளிகளும் தங்கியிருக்கும் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீரர்கள் மற்றும் அரசாங்க சார்பு போராளிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இப்பகுதியில் உள்ள ஒரு மூத்த இராணுவத் தலைவர் தெரிவித்தார்.

எனினும் மற்றொரு தரப்பு இந்த தாக்குதலில் 37 வீரர்கள் இறந்ததாக கூறுகின்றது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக உரிமை கோரப்படவில்லை.

ஐ.எஸ் போராளிகளும் சிரியப் படைகளும் பெரும்பாலும் பண்டைய நகரமான பல்மைரா அருகே தற்போது மோதுகின்றன.

பாலைவன பிராந்தியத்தில் குகைகளில் மறைந்திருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள், கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்து நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *