முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயமல்ல என்பதனை ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்

599

இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக் கூடிய விடயமல்ல என்றும், அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இப்போதைய சனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவே என்றும் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்கள குடியேற்றத்தை உருவாக்கும் நோக்குடன் ஹிபுல் ஓயா திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதையும், பின்னர் வெள்ளக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கும் மேலாக, வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்று பல வடிவங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றன எனவும் ரவிகரன் விபரித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *