அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க பிரியந்த தலைமையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோரும், இந்த ஆணைக்குழுவில், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, இரா.சம்பந்தன், சுமந்திரன், அனுரகுமார திசநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது