முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவை ஐ.நா.அமைதிப்படையிலிருந்து இடைநிறுத்தக் கோருகிறார் சூக்கா

321

சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்த வேண்டும் என, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்படும் சிறிலங்கா படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா என ஆராயப்பட்டதா என்பதை உறுதி செய்யக்கூடிய நிலையில் நியுயோர்க் இல்லை என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காப் படையினரை அமைதிப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய சட்டரீதியான கடமை ஐ.நா அமைதி பணிகளுக்கான திணைக்களத்திற்கு உள்ளது.

மனித உரிமை மற்றும் சிறிலங்காவின் நீதி ஆகியன  குறித்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் அடிப்படையில், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினால் அதற்காக விளைவுகளை ஐ.நா  அமைதிப்படை சிறிலங்காவுக்கு வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும், யஸ்மின் சூகா மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *