முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது

338

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் சென்றிருந்த மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடியில்ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே, 27 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுடன் மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களுடன் சென்றிருந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சநிலையில் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பின்னர் தெரியவரும் என சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *