சிறிலங்கா வில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை உறுதி செய்தல் பிரித்தானிய அரசுக்கு உள்ள கடப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் இன்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களான சிபொன் மக்டொனா, எலியொட் கோல்பர்ன், எட்வர்ட் டேவி ஆகியோரின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட இந்த விவாதத்தில் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பிரிட்டிஷ் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த விவாதத்தில், ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானம் மேலும் உறுதியானதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.