பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களுக்கு மத்தியில் அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் மருந்து ஒழங்குபடுத்தல் ஆணையகம் அவசரமாக கூடி இந்த முடிவினை எடுத்ததோடு இணைய வாயிலாக அதற்கான கையொப்பத்தையும் இட்டுக்கொண்டது.
பாகிஸ்தானில் இரண்டு தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் சினோபார்முக்கு அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை மதிப்பீடு செய்த பின்னர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் முதலில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் தொடர்பான மேலதிக தரவுகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு காலாண்டிலும் அங்கீகாரம் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களுக்கு மத்தியில் அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அந்நாட்டு மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தான் மருந்து ஒழங்குபடுத்தல் ஆணையகம் அவசரமாக கூடி இந்த முடிவினை எடுத்ததோடு இணைய வாயிலாக அதற்கான கையொப்பத்தையும் இட்டுக்கொண்டது.
பாகிஸ்தானில் இரண்டு தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் சினோபார்முக்கு அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை மதிப்பீடு செய்த பின்னர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் முதலில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் தொடர்பான மேலதிக தரவுகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு காலாண்டிலும் அங்கீகாரம் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.