சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே, சீனாவுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று, சீன தூதரகங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா பரவலை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பயணிகளுக்கு சீனா தடை விதித்திருந்தது.
இந்தநிலையிலே, தமது நாட்டு கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே சீனாவுக்குள் வர அனுமதி அளிக்கப்படும் என சீன தூதரகங்கள் அறிவித்துள்ளன.
சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் இல்லை என்பதால் சீனாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் நடைமுறைக்கு சிறிது காலம் தேவைப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.