சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, சீனாவின் வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் (Xinjiang) உய்குர் (Uyghur)இனத்தவர்களுக்கு எதிரான முறைப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நான்கு சீன அதிகாரிகளுக்கு எதிராகவும், ஒரு சீன நிறுவனத்துக்கு எதிராகவும் பொருளாதார தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் இந்த பொருளாதாரத் தடைகளை நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அல்லது சீனாவுடன் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும் அல்லது ஈடுபட சிந்திக்கும் நிறுவனங்கள் இந்த புதிய பொருளாதாரத் தடைகளை கவனமாக ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.