முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

செட்டிக்குளத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

379

வவுனியா, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையான இராமையா நல்லநாதனை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை கடைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். 2 நாட்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரின் மனைவி செட்டிகுளம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள காவல்துறை நிலையத்தில் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *