பூமியில் ஏற்படுவது போன்று, செவ்வாய் கிரகத்திலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின், கிளை நிறுவனம் ஒன்று, ‘இன்சைட் ரோவர்’ என்ற சிறிய ரக வாகனத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியிருந்தது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள அந்த ரோவர் வாகனமே, நாசாவில் நிலஅதிர்வு ஏற்படுவதை அண்மையில் கண்டுபிடித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.3 மற்றும் 5 அளவுகளில், இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக, நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.