முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

செவ்வாய் கிரகத்தில் ‘இன்ஜினுட்டி’ உலங்குவானூர்தி ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் பறக்க விடப்படும்; நாசா

251

செவ்வாய் கிரகத்தில் ‘இன்ஜினுட்டி’( Ingenuity ) உலங்குவானூர்தி ஏப்ரல் 8-ஆம் திகதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பிய பெர்சவரன்ஸ் (Perseverance) விண்கலம், கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

இந்த விண்கலத்துடன் மிகச்சிறிய ரக உலங்குவானூர்தி ஒன்றும், செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

இன்ஜினுட்டி’( Ingenuity ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன உலங்குவானூர்தி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.

இந்த உலங்குவானூர்தி வரும் ஏப்ரல் 8-ஆம் திகதிக்குள்  பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதன்மூலம் பூமிக்கு வெளியே முதல் முறையாக உலங்குவானூர்தி ஒன்றை நாசா இயக்க உள்ளது.

ரைட் சகோதரர்கள் உருவாக்கிய முதல் விமானத்தின் ஒரு பகுதியும், இந்த உலங்குவானூர்தியில் இணைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *