சோமாலியாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மொகாடிஷு( Mogadishu) துறைமுகத்திற்கு அருகிலுள்ள உணவகத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல் கொய்தாவுடன் இணைந்த அல் ஷபாப் கிளர்ச்சியாளர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சோமாலியா எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.