முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவது என்ற அரசின் முடிவு முற்றிலும் முரண்பாடான

319

“ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவது என்ற அரசின் முடிவு முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக்கொடுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாகக் காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை. இதன்காரணமாகவே நாட்டுத் தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரைக்குச் செல்லவேண்டிய நிலை தோற்றம்பெறும் என்ற கருத்தும் அப்போது குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது.”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *