முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 28ம் திகதி திறந்து விடப்படவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேதா இல்லம் அரசு உடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள வேதா நினைவு இல்லம் வரும், 28ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.