கனடிய சுகாதாரத்துறை அனுமதித்துள்ள தடுப்பூசிகள் ஒருவார காலத்திற்குள் வந்தடையவுள்ளதாக அத்துறையின் சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் சுப்ரியா சர்மா (Supriya Sharma) தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசியை போடுவதன் ஊடாகவே நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மார்ச் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நிலைமைகள் ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் ஆண்டின் இறுதிக்குள்ளேயே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு நிறைவடையும் என்றும் குறிப்பிட்டார்