ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) உற்பத்தி கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் காணப்படுகின்ற தடைகள் தொடர்பில் கனடாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிக்கு கனடிய சுகாதார துறை அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை கனடிய அரசு முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் அந்த முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் அவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.
அச்சந்தர்ப்பத்திலேயே இந்த தடுப்பூசியின் உற்பத்தியில் காணப்படுகின்ற பின்னடைவுகள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கனடிய அரசாங்கம் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனத்திடம் 10மில்லியன் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.