கனடாவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படுவதற்கான 20 விடுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்.
அதுவரை அரசாங்கத்தால்அனுமதிக்கப்பட்ட விடுதிகளில் தங்கள் சொந்த செலவில் தங்க வேண்டும் என்ற விதிமுறை பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை முடிவுகளுக்கான காத்திருப்பு மூன்று நாட்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவிடுதிகளில் பயணிகள் நேரடியாக முன்பதிவு செய்ய முடியும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.