தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1009 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து பேரணியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவளை சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அணுசரணையுடன் 70மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.