தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர் என்று சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ சசிகலா சென்னை திரும்புவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக் கூடாது.
4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோருகிறார்.
பொது மக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர்.
100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா தரப்பு முயற்சி செய்கின்றனர்.
சசிகலா, தினகரன் தரப்பிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என காவல்துறை தலைவரிட்டம் புகார் அளித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.