முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

291

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளுக்கும் எதிர்வரும் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு 3 ஆயித்து 997 பேர், வேட்புமனுக்கள் இதுவரை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் 3 ஆயிரத்து 332 பேர், ஆண்கள் என்பதுடன் 664 பேர், பெண்களாவர். மற்றும் ஒரு திருநங்கையும் உள்ளடங்குகிறார்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *