தமிழக சட்டசபைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்தநிலையில் கமலஹாசன் ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலந்தூர் தொகுதியில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளையும், கோவை தெற்கு தொகுதியில் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 105 வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது.
இதனை கருத்தில் கொண்டே அங்கு போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.