தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பாட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு அதுகுறித்த தீவிர சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னைக்குப் புறப்பட்டுள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.