முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 15வது நாளான இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அப்பலோ விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கியிருக்க வேண்டியுள்ளதாக அப்பலோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.