முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வையுங்கள்

250

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே ஸ்ரீதரனால் இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி,கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் காணிகளை இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான காணியையும் இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அக்கராயன் கரும்புத் தோட்டத்தின் காணியை தனிநபர்களுக்கு வழங்க முடியாது எனவும் அது கூட்டுறவுச் சங்கத்திற்கே வழங்கப்பட வேண்டும்.

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும், சட்ட விரோதமான மண் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தினார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *