பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம் என்று யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான எந்தவொரு தவறையும் நான் செய்யவில்லை.
யாழ் மாநரக சபையை துாய்மையாக பேணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யாழ் மாநகர காவல் படையின் செயற்பாடுகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும்.
யாழ் மாநகர காவல் படையின் ஆடையின் நிறம் தொடர்பாக காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராயப்படும்.
மாநகர காவல் படையின் உடை தொடர்பாக ஊடகங்களிலும் முகநுால்களிலும் தவறாக சித்தரிக்கப்பட்டமையினாலேயே தாம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.