தான் புதிய கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன்.
நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி என்னக்கு மட்டும் தான் தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.