முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன

624

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தத நிலையில், அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு நாள் வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

நினைவுநாள் நிறைவடைந்த பின்னர் நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என்றும், அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும், குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர், ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாகவும் பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் நாள் நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் யாழ் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர் சபை உறுப்பினர் பார்த்திபன் நினைவிடத்தினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *