திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் தனியாருக்கு ஏலத்தில் விற்கப்படவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், இரண்டு விமான நிலையங்களையும் ஒரே நிறுவனமே நிர்வகிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்டத்தில் இயங்கும் 7 விமான நிலையங்களை தனியார் மயமாக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், இலாபத்தில் இயங்கும் திருச்சி விமான நிலையத்துடன் சேர்த்து, சேலம் விமான நிலையத்தையும், தனியார் மயமாக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.