திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வெளிநாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், போலி கடவுச்சீட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரான, மகேஸ்வரன் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கை வெளியில் இருந்து நடத்த அனுமதிக்கக் கோரியும் 4வது நாளாக இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
அவரது போராட்டத்தை நிறுத்துவதற்கு, தமிழக சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.