பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி தொடர்பாக, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மல்லாவி காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையிலேயே நேற்று அவரிடம் மல்லாவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி தொடர்பாக, சிறிலங்கா காவல்துறை தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.