முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தென்மராட்சியில் விபத்து; இருவர் பலி

317

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நுணாவில் சந்திக்கு அருகில் வீதியோரத்தில், திருத்த வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது மகிழுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த மூவர் மீட்கப்பட்டு, யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு, 50 வயதுடைய பெண் ஒருவரும் 9 வயதுடைய சிறுவனும், உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காரின் பதிவிலக்கம், மேல் மாகாணத்தைச் சேர்ந்தது என்பதால், அங்கிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *