முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தொகுதி பங்கீடு உடன்பாடு

177

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலாயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுக்களில், திமுகவுடன் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகைதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த உடன்பாடுகளில், கையெழுத்திட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *