யாழ்ப்பாணம் – அரியாலையில் இன்று முற்பகல் தொடருந்து மோதி, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உந்துருளியில் பயணித்தவர், அரியாலை – நாவலடியில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த 42 வயதுடைய விஸ்வநாதன் பாலரூபன் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆசிரியர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.