கனடாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 15 ஆயிரத்தை எட்டியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ரொறன்ரோவில் கடந்த 4 நாட்களில், 2226 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் நாள் தொடக்கம் 27ஆம் நாள் வரையிலான காலப்பகுதியிலேயே இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு நாட்களிலும், ரொறன்ரோ நகரில் மாத்திரம் 64 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் இதையடுத்து. இதுவரை உயிரிழந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2531ஆக அதிகரித்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.