ரொரண்டோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நாளாக மார்ச் 21ஆம் நாள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ரொரண்டோவில் நகரில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நெததன் பிலிப்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற போதே, மாநகர முதல்வர் ஜோன் ரொரி (JOHN TORRY), இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் நாள், ரொரண்டோவில் 70 வயதுடைய முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் பதிவாகியதாகவும், அதன் பின்னர் நகரில் 2 ஆயிரத்து753 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களை விட்டுச் சென்றுள்ள அனைத்து உறவுகளையும் இந்த நாளில் நினைவு கூருகிறோம் என்றும் நிகழ்வில் முதல்வர் ஜோன் ரொரி (JOHN TORRY), தெரிவித்துள்ளார்.